தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப் பெண்ணே குடும்பமும் மூன்று முடிச்சு குடும்பமும் இணைந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக வருகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் குடும்பமும் தில்லை ராஜன் குடும்பமும் வராததால் ஊர் பெரியவர்கள் முதல் மரியாதையை பிரசிடெண்டுக்கு வழங்க முடிவெடுத்து அதை எடுத்து கொடுக்கும்போது அந்த நேரத்தில் பார்த்து மேல தாளத்துடன் குடும்பத்தினர் என்ட்ரி கொடுக்கின்றனர்..
மறுபக்கம் நந்தினி விரோத இருந்து நானே அந்த அம்மன் சிலை செய்கிறேன் என சொல்ல இதில் எல்லாம் விளையாட்டா இருக்க முடியாது என்று சுந்தரவல்லி சொல்ல கடவுள் விஷயத்தில் யாரும் இப்படி இருக்க முடியாது என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


