மாதவியால் வெடித்த பிரச்சனை, சுந்தரவல்லியை அடிக்கப்போன சூர்யா , வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் ரஞ்சிதாவை சூர்யா வேகவேகமாக அழைத்து வந்து நந்தினி இடம் நாங்க பட்டாசு வாங்க போக போறோம் என்று கத்தி சொல்ல அருணாச்சலம் வந்து எதுக்கு இப்படி கத்துற என்று சொன்ன எல்லோருக்கும் கேட்கணும் டாடி என்று சொல்லிவிட்டு ரஞ்சிதாவை அழைத்து கொண்டு வெளியில் வர சுந்தரவள்ளியும் சுரேகாவும் பார்க்கின்றனர். நம்ம காரை தொடக்கூட அவளுக்கு தகுதி கிடையாது, ஆனால் அவ உக்காந்துகிட்டு போறா அவன் தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னா இவ அதுக்கெல்லாம் எங்களுக்கு தகுதி இல்ல வேண்டான்னு சொல்லாம வேடிக்கை பாக்குறா என்று கோபப்பட்டு பேசிக்கொண்டு இருக்க மாதவி வந்து வெடிவாங்கதான போறாங்க பாத்துக்கலாம் விடு என்று சொல்லுகிறார். நான் ஆல்ரெடி அவங்களுக்கு ஒரு பாம் வாங்கிட்டேன் அதுவும் ஆட்டம் பாம் அது எப்படி வெடிக்குதுன்னு மட்டும் பாரு என்று சொல்ல பிறகு அனைவரும் சென்று விடுகின்றன.

மறுபக்கம் ரஞ்சிதா நந்தினி குடும்பத்தினரிடம் நிறைய பட்டாசு மாமா வாங்கி இருக்காரு என்று சொல்லி சந்தோஷப்பட, குடும்பத்தினர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க சூர்யா வருகிறார். என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்க அதற்குள் புனிதாவும் ரஞ்சிதாவும் இதோ வந்துவிடுகிறோம் என சொல்லிவிட்டு சென்றுவிட சூர்யா பாட்டியிடம் ஜாலியாக உட்கார்ந்து பேசி கொள்கிறார். பிறகு அவர்கள் அரைத்த மருதாணியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ஊர்ல இருந்து அரைச்சு எடுத்துட்டு வந்தீங்களா என கேட்க இல்ல இங்க வந்து தான் அரச்சோம் என சொல்லுகின்றன. பிறகு சூர்யாவையும் நந்தினியும் எதிரில் உட்கார வைக்கின்றனர். நான் உங்க ரெண்டு பேர் கையையும் சேர்த்து வச்சு மருதாணி போட போறேன் ஆனா யாரு முதலில் எடுத்து விடுறாங்களோ அவங்களுக்கு பாசம் கம்மி என்று அர்த்தம் என்று சொல்ல பிறகு இருவரும் சேர்த்து கையை வைக்க புனிதாவும் மருதாணி போட்டு விடுகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யாவுக்கு மூக்கு அறிக்க சூர்யா சிலுங்கிக்கொண்டே இருக்க உடனே நந்தினி எழுந்திருச்சு என் கன்னத்துல உங்க மூக்கை வச்சு தேச்சுக்கோங்க என்று சொல்ல சூர்யாவும் அதே போல் செய்கிறார் ஆனால் கொஞ்ச நேரத்தில் நந்தினிக்கு கை வலி எடுப்பதை சூரியா கவனித்து எடுத்து விடுகிறார்.எங்க அக்கா மேல பாசமே இல்லையா என்று கேட்க எல்லாம் அதிகமாவே இருக்க ஆனா உங்க அக்காவுக்கு கை வலிச்சிடுச்சு அதை கவனிச்சதுனால தான் எடுத்தேன் என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினி, சூர்யாவும் கையை கழுவி விட மருதாணி சூப்பராக சிவந்து இருக்கிறது. மறுபக்கம் வெளியில் நந்தினி பலகாரம் சுட்டுக் கொண்டிருக்க மற்றவர்கள் பட்டாசு வெடிக்க சுந்தரவல்லி மேலே இருந்து கவனிக்கிறார். உடனே அடுப்பில் முறுக்கு சுட்டுக் கொண்டு இருந்த நந்தினியை சூர்யா எடுத்து வந்து சரத்தை வெடிக்கச் சொல்லுகிறார். நந்தினி வெடிக்க பயப்பட நான் சொல்லி தரேன் என சொல்லுகிறார் அதெல்லாம் வேண்டாம் நான் போய் முறுக்கு சுடுகிறேன் என சொல்ல சூர்யா நந்தினி இழுத்து வந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பட்டாசை வெடிக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து கடுப்பான சுந்தரவல்லி சென்று விட, சூர்யாவை கல்யாணம் உங்க போன் அடிச்சுக்கிட்டே இருக்கு என்று சொல்ல எடுத்துட்டு வர வேண்டியதுதானே என்று கேட்கிறார்.

நீங்கதான் சார்ஜரில் போட்டு இருந்தா எடுக்க வேணாம்னு சொல்லி இருப்பீங்க இல்ல அதனால தான் எடுக்கல என்று சொல்ல சூர்யாவே போனை எடுக்க போக மாதவி இப்ப தொக்கா மாட்டி இருக்கா இப்ப நான் போடுற வெடியை மட்டும் பாருங்க என்று சொல்லிவிட்டு மாதவி இதைவிட அங்க சூப்பரான மத்தாப்புலா இருக்கு போய் எடுத்துக்கோ என்று சொல்ல ரஞ்சிதாவும் எடுக்கப்போக கையில் சுட்டு விடுகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

மாதவியும் அசோகனும் நந்தினிக்கு வாங்கிய புடவையில் எண்ணெயை ஊற்றி விடுகின்றனர் பிறகு யார் இதை செய்தது என சூர்யா யோசிக்க காலடித்தடத்தை வைத்து கண்டுபிடிக்க முடிவெடுக்கிறார் அதில் அசோகனின் பாதம் பொருந்தி விட அவரை கன்னத்தில் அறைந்து விட பிறகு அசோகன் நான் தான் இதை பண்ணேன் வேறு யாருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல உடனே சிங்காரம் அசோகனிடம் ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க மாதவி என் புருஷன் கிட்டயே குரலை ஒசத்தி பேசுறியா என்று சிங்காரத்தை கன்னத்தில் அறைகிறார் உடனே சூர்யா மாதவியை கன்னத்தில் இரண்டு அரை விட உடனே சுந்தரவல்லி சூர்யாவை கை ஓங்குகிறார் பதிலுக்கு சூர்யாவும் சுந்தரவல்லி அடிக்க கை ஓங்க வீடே ரணகளம் ஆகிறது, பிறகு சிங்காரம் நம்ம வீட்டுக்கே போயிடலாம் தா என்று நந்தினியை கூப்பிடுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

6 hours ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

6 hours ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

6 hours ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

6 hours ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

6 hours ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

6 hours ago