மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி அசோகனிடம் எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அவர் தட்டி பறிச்சா இல்ல அப்படி பண்ணா என்ன நடக்கும் அவளுக்கு தெரிஞ்சாகணும் என்ற கோபமாக பேசுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி மாதவி இடம் கம்பெனி ஆளுங்க எல்லாம் அவளும் நானும் ஒன்னுன்னு நினைக்க மாட்டாங்களா என்று கேட்க மாதவி கண்டிப்பாக நினைப்பாங்க என்று சொல்லுகிறார்.
ஏற்கனவே இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாம் என் அதிகாரத்துக்கு ஆசைப்படுறதா நினைக்கிறாங்க இந்த நேரத்துல நீங்க இப்படி பண்ணீங்கன்னா நல்லா இருக்குமா என்று கேட்க சூர்யா நந்தினி இடம் பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 29-09-25