தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் பதற்றத்துடன் என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்கம்மா என்று சொல்ல என்னங்க இன்னும் அவர்கிட்ட எந்த உண்மையை சொல்லலையா உங்க பொண்ணு காணாம போயிட்டான்னு சொல்லுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினியை கண்ணைக் கட்டி, சேரில் கட்டி போட்டு வைத்திருக்க அவர் என்னை எதுக்கு அடைச்சு வச்சிருக்கீங்க என்று கேட்க, உன்ன வச்சு ஒரு காரியம் ஆக வேண்டியது இருக்கு அதனால தான் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் சூர்யாவிடம் சின்னையா எப்படியாவது என் பொண்ண காப்பாத்தி குடுங்க என்று சொல்ல உங்க சின்னையா தானே காப்பாத்தி கொடுத்துடுவாரு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
