தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் தீபாவளி சீர் வரிசை வைக்கிறதுக்காக எங்க வீட்ல இருந்து இந்த வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, ஏதாவது காரணத்தை சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வருவாங்க நான் வேடிக்கை பார்க்கணுமா என்று சுந்தரவல்லி கேட்கிறார்.
சூர்யா சமந்தி வீட்டுக்காரங்க வரும்போது என்ன மரியாதை கொடுக்கணும் அந்த மரியாதை கொடுக்கணும் என்று சொல்லுகிறார். தோட்டக்காரன் சீர் வரிசை வைக்க வராமல் அவனுக்கு விருந்து வச்ச கவனிக்கணுமா என்று சுந்தரவல்லி கோபப்படுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


