தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்க எதுவும் பண்ணாதீங்க எதுவும் பிரச்சனையா ஆகி விடப்போகிறது என்று சொல்ல நீ அமைதியாக இரு என்று சூர்யா சொல்லுகிறார். தேவையில்லாமல் அவனை சீண்டாதீங்க அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்ல சுந்திரவல்லி ஓ அப்படியா என்று நக்கலாக கேட்கிறார்.
மறுபக்கம் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு பத்திரிக்கை படிக்க சொல்ல அதில் மகன் சூர்யா மருமகள் நந்தினி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப்போகிறது இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


