கல்யாணத்திற்கு விழுந்த அடி, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்க,உனக்கு இப்ப என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கி தரேன் என்று சொல்ல அதற்கு நந்தினி நல்லா இருக்குறவங்கள ஒரு ஆக்சிடென்ட் பண்ணி என்னன்னு கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கீங்க. உங்களால் ஒரு உயிரே போக இருந்தது என்று சொல்ல சூர்யா என்னாச்சு என்று அதிர்ச்சியாக கேட்கிறார். யாருக்கு என்ன ஆச்சு என்று கேட்க யாருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன என்று கேட்க சூர்யாவிற்கு அருணாச்சலம் போன் பண்ணுகிறார். உடனே அவர் அங்கிருந்து கிளம்ப நந்தினி வருத்தப்படுகிறார்.

சூர்யாவிடம் எப்படி இருக்க என்று கேட்க ஹாப்பியா இருக்கு என்று சொல்லுகிறார். தெரியும் உங்க அமாவா அசிங்க படுத்திட்ட அவமானப்படுத்திட்ட இந்த ஊரு முன்னாடி சிரிக்க வச்சுட்ட என்றெல்லாம் சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார். ஆனா நந்தினி கிட்ட தாலி கட்ட போற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லல, முன்னாடி நான் நைட் வரைக்கும் ஒரு பொண்ணு கூட சந்தோஷமா சுத்திட்டு மறுநாள் காலையில ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டினால் எப்படி. தப்போ சரியோ அந்தப் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து இருக்கோ அதை ஏமாத்துன மாதிரி தான. ஆனா எப்ப ரூமுக்குள்ள நந்தினி ஒரு பொண்ணு இருக்கா ஆனா இப்ப அவள உன்னோட அம்மாவ வெறுப்பேத்திட்டேன்னு சொல்லி அனுப்பி வெச்சிட மாட்ட இல்ல என்று சொல்ல அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் டாடி என்று சொல்லுகிறார்.

நீ போய் படுத்துட்ட அதுக்கப்புறம் நந்தினியை தங்க வைக்கிறதுக்காக நான் போராடிகிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து அவருடைய அப்பாவிற்கு நெஞ்சு வலி வந்து விட்டது. அதுக்கப்புறம் அவர காப்பாத்தி கூட்டிட்டு வந்தோம். அதெல்லாம் விடு சூர்யா ஆனா எவ்வளவு கனவுகளோடு இல்ல அந்த பொண்ணு கழுத்துல திடீர்னு தாலி கட்ட அதனால அவ கோபப்படுவா திட்டுவானாலும் அதை ஏற்றுக்கொள்ள அவகிட்ட போயிட்டு அம்மாவை வெறுப்பேத்தறதுக்காக தான் தாலி கட்டின என்றெல்லாம் சொல்லாத, நல்ல பொண்டாட்டி கூட இருந்தா உலகத்தையே ஜெயிக்கலாம் என்று அட்வைஸ் செய்து விட்டு வாக்கிங் கூட்டிச் செல்கிறார்.

மறுபக்கம் அம்மாச்சி நந்தினியின் தங்கைகளும் பேசிக் கொண்டு வர, அந்த நேரம் காரில் வந்து சுதாகர் இறங்குகிறார். பாக்குறதுக்கு பொரி உருண்டை மாதிரி இருந்துகிட்டு புளியும் கொம்பா புடிச்சிட்டீங்களே என்று நக்கல் பண்ணி பேசுகிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு வம்பு இழுத்துக்கிட்டு இருக்க என்று கேட்க, உங்களுக்கெல்லாம் இருக்கு இதுக்கு மேல தான் என்று சொல்லிவிட்டு கிளம்ப அம்மாச்சி திட்டிவிட்டு வீட்டுக்கு செல்கிறார்.

வரும்போது சிங்காரம் மரத்தடியில் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிற இவர்கள் மூவரும் அவரைப் பார்த்து நலம் விசாரிக்கின்றனர். ஏன் அழுதுகிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை என்ன ஆச்சு என்று அம்மாச்சி கேட்க, தங்கைகள் இருவரும் அக்காவுக்கு என்ன ஆச்சு அக்கா எங்க என்று கேட்கின்றனர். அந்தத் திருட்டு பையன் சுதாகர் வேற ஏதேதோ சொல்லி பயமுறுத்துனா நீங்க வேற அழுது கிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு என்று பதறி கேட்க, என்னத்த சொல்றது நம்ம நந்தினிக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று சொல்லி அழ மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கல்யாண வேலை பார்க்க தான்பா போனீங்க என்று கேட்க அம்மாச்சி விவரமாக சொல்லுங்கள் என்று பதற்றத்துடன் கேட்கிறார். பிறகு நந்தினி அப்பா அங்கு நடந்து விஷயங்களையும் சூர்யா நந்தினி கழுத்தில் தாலி கட்டியதையும் சொல்லுகிறார். என்ன மாப்ள இதெல்லாம், என்ன அநியாயம் இது அவ சம்மதம் இல்லாம அவ கழுத்துல எப்படி தாலி கட்டலாம் இதை யாரும் கேட்கலையா இது யாரும் தடுத்து நிறுத்தலையா என்று கேட்கிறார். எல்லாமே கண்ண மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள எல்லாமே செஞ்சி முடிச்சிட்டாங்க என்று சிங்காரம் அழுகிறார் அப்போ இனிமே அக்காவை பார்க்கவே முடியாது அப்பா என்று நந்தினியின் தங்கை கேட்கிறார்.

ஏற்கனவே அந்த குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு நம்பள பிடிக்காது என்ன ஷூ துடைக்க வச்சாங்க அவளை முட்டி போட வச்சு கஷ்டப்படுத்தினார்கள் அக்கா எப்படி அந்த வீட்ல சந்தோசமா இருக்க முடியும். ஏன் விட்டுட்டு வந்தீங்க என்று கேட்க அம்மாச்சி தன் வாழ்க்கையோட தங்கச்சிங்க வாழ்க்கை தான் முக்கியம் என்று இருந்தா, அவளுக்கு கட்டாய தாலி கட்டி வாழ சொன்னா எப்படி வாழ முடியும் என்று கேட்டு உடனே நம்ம வாங்க கிளம்பலாம் என்று கூப்பிடுகின்றனர்.

உங்களுக்கு கேக்குறதுக்கு எப்படி இருக்கும்போது நேரில் பார்த்த நான் எப்படி இருந்திருப்பேன். தாலி கட்டிய கையோட நான் எப்படி வீட்டுக்கு வாழ கூப்பிட முடியும் என்று சொல்ல அதுக்காக அக்காவை அப்படியே விட்டுட்டு வர முடியும். உடனே அம்மாச்சியும் உங்க அப்பா சொல்றதுதான் சரி தாலி கட்டி எடுக்கிறது எடுத்தோம் கவுத்தோடு முடிவெடுக்க முடியாது. ஐயா தான் தைரியம் சொல்லி என்னை அனுப்பி வைத்திருக்காரு என்று சொன்னா அவர் சொல்றது இருக்கட்டும் நம்ப போய் சொன்னா தானே அவ தைரியமா இருப்பா என்று அம்மாச்சி சொல்லுகிறார். போலா அத்தை இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அதுக்குள்ள நந்தினியை ஐயா பார்த்துப் பாரு என்று சிங்காரம் சொல்கிறார்.

நந்தினி ரூமில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க மாதவி சுரேகாவை கூப்பிட ஏன்கா என்ன இப்போ எழுப்பின எனக்கு தூக்கமா வருது என்று சொல்லுகிறார். உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா நைட்டு நந்தினி ஓட அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துடுச்சு அப்புறம் அவரு கூட்டிட்டு போய் காப்பாத்தணும் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நந்தினி ஊருக்கு போயிட்டான்னு அம்மா நினைச்சுக்கிட்டு இருக்காங்க ஆனா அவ சூர்யாவுடன் ரூம்ல தான் இருக்கா எப்படி அம்மாவ சமாளிக்கறதுன்னு தெரியல என டென்ஷன் ஆக இருக்கிறார். கல்யாணம் எல்லாருக்கும் காபி கொடுக்க சுந்தரவல்லிக்கும் கொடுக்கிறார். அந்த வேலைக்காரன் எங்க போய் இருக்கான்னு கேட்ட ஊருக்கு போயிட்டாரு என்று சொன்னவுடன் சந்தோஷப்படும் சுந்தரவல்லி சூர்யாவை கேட்டவுடன் வாக்கிங் அய்யாவோட போயிருக்காரு என்று சொல்லிவிட்டு நந்து நந்தினி அம்மா ரூம்ல இருக்காங்க என்று சொன்னவுடன் காபி கப்பை தூக்கி விசிறி அடிக்கிறார். வீட்ல தான் இருக்காளா அவ்வளவு சொல்லியும் அவ போகலையா அவ பேக் தூக்கி வெளியே போடுங்க என்ற கோபப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் என்ன பொண்ணு தெரியுமா அவ,திமிரு புடிச்சி இருக்கிறவங்க மத்தியில அப்படி ஒரு பொண்ணு டா என்று சுந்தரவள்ளியே வெறுப்பேற்றும் படி போனில் பேசுகிறார். உடனே சுந்தரவல்லி மாதவியின் அவமானத்தை என்னால தாங்கிக்கவே முடியல என்று சொல்லுகிறார்.

பிறகு கல்யாணத்தை அருணாச்சலம் அறைந்து யார நந்தினி என்று பெயர் சொல்லி கூப்பிடுற அவை இந்த வீட்டோட மருமக என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update
jothika lakshu

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

23 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago