தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் என் பொண்ணுக்கு என்ன மாதிரி பையனும் பாக்கணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு ரோட்ல போறவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு பேச்சை பாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவள்ளி வீட்டில் இருக்கும் பரமும் அவரது அண்ணனிடம் நம்மளுக்கு தேவை இந்த வீட்டில் இருந்து ஒரு உசுரு போகணும் அதை பார்த்தால் என்ன பார்க்கலனா என்ன என்று சொல்லுகிறார்.
உடனே வீட்டுக்கு வந்த கெஸ்ட் பெண் ஒருவர் எப்போ சூர்யா அந்த வேலைக்கார பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டானோ அப்போல இருந்து நம்ம தகுதியிலிருந்து அவன் கீழே இறங்கிட்டான் என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


