Moondru Mudichu Serial Promo Update 12-02-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ .சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இதை நான் வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன் என்று சுந்தரவல்லி சொல்லி மருந்து வாங்குறாளா அந்த மருந்து அவள் வேணா குடிக்கட்டும் எக்காரணத்தைக் கொண்டு என் பையன் குடிக்கக்கூடாது இத மட்டும் பண்ணுங்க மத்ததை நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். ரேணுகா போனை ஆன் செய்துவிட்டு கிச்சனில் வேலை பார்க்க நந்தினி உடன் மீண்டும் பேச்சு கொடுக்கிறார். நந்தினியிடம் சாதாரண இடத்துல கல்யாணம் பண்ணி இருந்தாலே வெளி ஊருக்கெல்லாம் போயிருப்பாங்க நீங்க எந்த வெளிநாட்டுக்கும் போகலையா என்று கேட்க நான் எங்கேயும் போனது கிடையாது நான் எங்கேயும் போகல பட்டுகோட்டை தவிர நான் இங்கதான் இருக்கேன் என்று சொல்லுகிறார்.
இன்னொன்னு கேட்கணும்னு தோணுது கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே கொஞ்சம் கேட்க கோச்சுக்காத மாதிரி கேளு என்று சொல்லுகிறார் நந்தினி. கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல எல்லாம் கேட்கிறது தான் நீங்க குழந்தை பெத்துக்கலையா என்று கேட்க நந்தினி இந்த பேச்சை விட்டுட்டு வேற ஏதாவது பேசலாமா என்று சொல்லிவிடுகிறார் இதனால் அர்ச்சனா அப்செட் ஆகி ஃபோனை கட் செய்து விடுகிறார். குழந்தை பெத்துக்கணும்னா புருஷனும் பொண்டாட்டியும் முதல்ல ஒன்னா சேர்ந்து வாழணும்னு அது எப்படி என்று கேட்கிறார்.
ரூமில் சூர்யா டென்ஷனாக உட்கார்ந்து கொண்டிருக்க அசோகன் அந்த மருந்தை எடுக்க வருகிறார். சூர்யாவிடம் பேச்சு கொடுக்க இருக்கு ஆனா இல்ல என புலம்ப ஆரம்பிக்கிறார். எனக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியல மாமா. உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப அழுகையா வருது மாப்ள நான் போய் ரூம்ல போய் அழுதுகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். நந்தினி கிளாஸில் பாலை ஊத்தி மருந்தை கலந்த பிறகு ரேணுகா அர்ச்சனா கொடுத்த மருந்தை கலக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது நந்தினி அதை கொண்டு போய் கொடுக்கப் போக வழியில் அசோகன் வாங்கி குடித்து விடுகிறார் உடனே ரேணுகா இதுதான் நல்ல சமயம் நம்ம இந்த மருந்த ஊத்தி பால்ல கலந்துடுவோம் என்று சொல்லி அதை கலந்து வைத்து விடுகிறார். உடனே நந்தினி இடம் இதுதான் கடைசி பால் இதனில் அந்த பொடியை கலந்து சூர்யா சரக்கு கொடுத்துடுங்க என்று சொல்லிக் கொடுக்கிறார்.
நந்தினியும் அதில் பவுடரை கலந்து சூர்யாவிற்கு எடுத்து வருகிறார். சூர்யாவிடம் ஒன்றும் தெரியாதது போல் ரெண்டு மூணு நாளாவே ஏன் படபடப்பா இருக்கீங்க என்று கேட்ப மீண்டும் சரக்கு பாட்டிலை எடுத்து புலம்ப ஆரம்பித்து யாரையாவது போட்டு அடிக்கலாம் போல இருக்கு என்று சொல்ல அதற்கு நந்தினி அதுதான் உங்களுக்கு போதை ஏறல அதை விட்டுரலாம் இல்ல என்று சொல்ல நான் எதுக்கு விடணும் எனக்கு ஒரே ஆறுதல் இவங்கதான் அவங்க கிட்ட இருந்து என்னை பிரித்து பாக்கறியா என்று கோபப்படுகிறார். நான் என்ன பண்ண என்று சொன்னேன் நீ ஒன்னும் பண்ணல யாரும் ஒன்னும் பண்ணல எல்லாமே இவனுங்க தான் என்று கிளம்பி கொண்டே இருக்க சூர்யாவிடம் பாலை கொடுத்து இந்தப் பாலை குடித்தால் படபடப்பு போயிடும் சூர்யாவிற்கு அந்த நேரம் பார்த்து போன் வர நந்தினி பால் குடிங்க குடிங்க என்று வற்புறுத்திக் கொண்டே இருக்க சரி நான் எடுத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் மீண்டும் கள்ளு குடிப்பது குறித்து நண்பனிடம் பேசிக் பேசிக் கொண்டிருக்க சூர்யா குடிப்பது போல் செய்வதை பார்த்துவிட்டு நந்தினி சந்தோஷப்பட்டு சென்றுவிட ஆனால் சூர்யா செடியில் ஊற்றி விடுகிறார்.
பெட்ரூமில் அசோகன் பூக்களை தூவி விட்டு மாதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் இந்த வீட்ல நம்ம குழந்தைகள் தான் ஓடி விளையாடனும் என்று சொல்லி காத்துக் கொண்டிருக்க மாதவி வெட்கத்துடன் ரூமுக்குள் வர இருவரும் ரொமான்டிக் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகின்றன. உடனே மாதவி அசோகனை கூப்பிட அனைத்தும் கனவு என தெரிய வருகிறது. பிறகு மாதவியிடம் நந்தினி சூர்யாவுக்கு முன்னாடி நம்ப முந்திக்கணும் மூத்த வாரிசு நம்பதா பெத்துக்கணும் என்று மாதவி கையைப் பிடிக்க மாதவி உதறிவிட்டு இப்பதான் சின்ன வயசு என்று திட்ட அசோகன் வாரிசு வேண்டும் என்று கெஞ்சி கேட்கிறார் பிறகு மாதவி அவரை தள்ளிவிட்டு வருகிறார். அருணாச்சலம் போன் பேசிக் கொண்டிருக்க நந்தினி சூர்யா சார் குடிச்சுட்டாரு என்று சொல்ல அருணாச்சலம் சந்தோஷப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினி சூர்யாவை ரூமில் தேட விஜி அழுது கொண்டே போன் பேசுகிறார். அங்க என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணிக்கிட்டு இரு எதுனாலும் எனக்கு உடனே இன்பார்ம் என்று அர்ச்சனா ரேணுகாவிடம் சொல்லுகிறார்.
அருணாச்சலம் நந்தினி இடம் சூர்யா எப்பமா வெளியே போனா என்று கேட்க நான் தூங்குற வரைக்கும் உள்ளதா இருந்தாரு அதுக்கு அப்புறம் எப்படி தெரியல என்று பதற்றத்துடன் காரில் செல்கின்றன.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…