Moondru Mudichu Serial Promo Update 07-08-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் தேங்காய் சாப்பிடக்கூடாதுன்னு மாதவி அம்மா ஏற்கனவே சொல்லி இருக்காங்க அப்படி இருக்கும்போது ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்ல எனக்கு ஒன்னு புரியுது மாதவி அம்மா கிச்சனுக்கு வரும்போது நீங்க எதுக்கு மிக்சியில் கை விட்டீங்கன்னு கேட்டாங்க அவர் மிக்ஸியில் கைவிட்டது அவங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவங்க உனக்கு ஏதோ பிளான் வைக்கிறாங்க நீ பார்த்து உஷாரா இருந்துக்கோ என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.சூர்யாவிற்கு நந்தினி மாத்திரை கொடுக்க வைத்துவிட்டு போ எனக்கு போட்டுக்க தெரியும் என்று கோபப்பட எதுக்கு இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார் பின்ன என்ன உனக்கு இங்கிலீஷ் கத்து கொடுத்து எங்கம்மா முன்னாடி கெத்தா நிக்க வைக்கணும்னு பாத்தா நீ கோப்ரேட் பண்ண மாட்டேங்குற என்று சொல்லுகிறார். நீங்க இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கணும்னு ஆர்வம் எனக்கு புரியுது ஆனா நீங்க தப்பான ஆள் கிட்ட கத்து கொடுக்கணும்னு சொல்றீங்க எனக்கு இங்கிலீஷ் படிக்கணும்ன்றது ஏணி வச்சாலும் எட்டாது இது மட்டும் இல்லாம நீங்க எதுக்கு இப்படி எனக்கு இங்கிலீஷ் கத்து கொடுக்கணும்னு நினைக்கிறாங்க உங்க அம்மாவை மட்டம் தட்ட தானே என்று சொல்ல நான் அப்படியெல்லாம் சொல்லல என்று சொல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படித்தானே சொன்னீங்க என்று கேட்கிறார்.
உங்க அம்மாவுக்கு எதிரா என்ன கொம்பு சீவி விட வேண்டாம் என சொல்ல அப்படின்னா என்ன என்று கேட்க நந்தினி மாட்டுக்கு கொம்பு சீவி விடும் விஷயத்தை சொல்லுகிறார். இப்போ என்ன நீ இங்கிலீஷ் கத்துக்க மாட்டியா என்று சொல்ல என்னால முடியாது சார் அப்படியும் எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா எங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டுடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி வாசலுக்கு தண்ணீர் தெளித்து கொண்டிருக்க அசோகனும் மாதவியும் மேலே கவனித்து விட்டு நான் போய் நந்தினி பின்னாடி நிக்கிறேன் நீ கரெக்டா குறி வச்சு அவ கைய பார்த்து அடி என்று சொல்லிவிட்டு கீழே வருகிறார். அசோகன் கரெக்டா இருக்கும் அடி என சைகை காட்ட மாதவியும் குறி வைத்து அசோகன் கண்ணின் மேல் அடித்து விடுகிறார்.
உடனே மாதவி வாங்க டாக்டர் கிட்ட போகலாம் என அழைத்துச் சென்று விட்டு வீட்டுக்கு வருகிறார். பிறகு சுந்தரவல்லி அருணாச்சலம் இத பாத்தா குறி வச்சு அடிச்ச மாதிரி உனக்கு என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லை என மாதவி சொல்லுகிறார். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என அருணாச்சலம் கேட்க வேண்டாம் என அசோகன் சொல்லுகிறார். உடனே சூர்யா வந்து கிண்டல் அடித்து சிரிக்க, மாதவி கோபப்படுகிறார். பிறகு சுந்தரவல்லி அருணாச்சலம் சென்றுவிட அசோகனை மாதவி அழைத்துக் கொண்டு சென்று விட, நந்தினி சூர்யா சிரித்த விஷயத்தை கல்யாணத்திடம் சொல்லி எதுக்கு இப்படி சிரிக்கிறார் ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போது இப்படித்தான் சிரிப்பாங்களா என்று கேட்டு கோபப்படுகிறார். அதற்கு கல்யாணம் சின்னையா காரணம் இல்லாம எதையும் பண்ண மாட்டாரு என்று சொல்லுகிறார். சரி இந்த வாட்டி அவருக்கு எப்படி அடிபட்டது என கல்யாணம் கேட்கிறார்.
கோலம் போட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்துல அவர் கத்தர சவுண்டு கேட்டது என்று சொல்ல, நீ சொல்ற இடம் வெட்ட வெளி நீ இருக்குற இடத்திலேயே தான் அவருக்கு அடிபடுமா ஏதோ ஒரு தப்பு நடக்குது உஷாரா இருந்துக்கோ. என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மாதவி அசோகனுக்கு சாப்பாடு ஊட்டி விட சுரேகா வருகிறார். என்ன பிளான் பண்ணாலும் வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது என்று சொல்ல, எதையும் நீங்க செய்துக்கோங்க என்னை கூப்பிடாதீங்க என்று சொல்ல சுரேகாவிடம் ஐடியா கேட்கிறார் எனக்கும் எதுவும் தோணல என்று சொல்ல மாதவி எனக்கு ஒன்னு தோணுது ஆனால் சரியா வருமான்னு தெரியல என சுரேகா காதில் சொல்லுகிறார்.
இது சூப்பரான ஐடியா அக்கா இது மிஸ் ஆக வாய்ப்பே இல்ல, கண்டிப்பா செஞ்சுடலாம் என முடிவெடுத்து சென்று விடுகின்றனர். மறுபக்கம் சூர்யா அடிபட்டு இருந்த கையில் மீசையில் கத்திரிக்கோல் வைத்து வெட்டிக்கொண்டு இருக்க நந்தினி வந்து டவல் கொடுக்கும்போது பார்த்துவிட்டு நான் நல்லா பார்த்தேன் நீங்க அந்த கையில் தான் வச்சிருந்தீங்க என்று சொல்லுகிறார். நான் எல்லா கையில் மாற்றி தான் வைத்திருந்தேன் என்று சொல்ல, பொய் சொல்லாதீங்க நான் உங்ககிட்ட ஏதாவது பொய் சொல்லி இருக்கேன் நான் என்று நன்றி சொல்ல நீ நிறைய சொல்லி இருக்க எனக்கு புடிக்காத சாப்பாட்டை பேர மாத்தி சொல்லி ஏமாற்றி இருக்க என்று சொல்ல, நீ வேணா எனக்கு ட்ரிம் பண்ணிவிடு என்று சொல்ல நந்தினியும் சரி என சொல்லி கத்திரிக்கோலை வாங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் கிச்சன்ல பாத்திரத்துல கை வச்ச போது கை சுட்டுடுச்சு என்று சொல்ல சுரேகா என்ன தைரியம் அம்மா கையெழுத்து போடற இடதுல இவ கையெழுத்து போடுவா என்று பேசிக்கொண்டே இருக்கிறார் மறுபக்கம் சூர்யா கல்யாணத்திடம் ஏற்கனவே நந்தினி கிச்சனுக்கு வந்து வேலை செய்யப் போறது தெரிஞ்சு வேணுமே அந்த சொம்ப கேஸ் மேல வச்சிருக்காங்க அப்படித்தானே என்று கேட்க கல்யாணம் ஆமாம் ஐயா என்று சொல்லுகிறார் மறுபக்கம் மாதவியும் சுரேகாவும் சந்தோஷப்படுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Parimala and Co Title Teaser | Jayaram | Urvasi | Pandiraaj | Foxn
Sattendru Maarudhu Vaanilai Trailer | Jai | Yogi Babu | Babu Vijay | Meenakshi G…
Amma Amma Dhaan Lyric Video | Nooru Sami | Vijay Antony | Sreekanth Hariharan |…
GLADIATORS FILM MOTION POSTER | AJITH KUMAR | DIRECTOR VIJAY | GV PRAKASH KUMAR
I Nobody Official Teaser | Prithviraj Sukumaran | Parvathy Thiruvothu | Nisam Basheer | Jakes…
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…