தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் ,மாதவி மற்றும் சுரேகாவிடம் வீடு அலங்காரம் பண்ணியிருப்பதை பார்த்துவிட்டு நம்ம எந்த ஏற்பாடும் பண்ண சொல்லாமல் யார் இதெல்லாம் பண்ணது என்று கேட்க சுந்தரவல்லி நான் தான் செஞ்சன் என்று வந்து நிற்கிறார்.
விஜி நந்தினியிடம் இப்ப போய் தாலி செயின் காணோம்னு சொல்றாங்க என்று கேட்க அதற்கு நந்தினி நான் தான் சொன்னேன்ல அக்கா ஒரு பிரச்சனை நடக்கும் அந்த பழியை தூக்கி என் மேல போடுவாங்கன்னு என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கல்யாணத்திடம் தாய்க்குலம் எங்கே என்று கேட்டு அழைத்து வர சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
