Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யாவின் பதில் என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 05-1-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் வர கல்யாணமும் சூர்யாவும் கீழே உட்கார்ந்து இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாதவி வந்தவுடன் எனக்கு சாப்பாடு போடணும் என்று சொல்ல கல்யாணம் எழுந்திருக்க உடனே சூர்யா உங்களுக்கு சாப்பாடு வேண்டுமானால் கீழே உட்காருங்க என்று சொல்ல சுரேகா நாங்க ஏன் கீழே உட்காரனும் என்று கேட்க அப்போ போய் தெருவுல உட்காரு என்று சொல்லுகிறார்.

உடனே சுந்தரவல்லி வந்து பசங்க வந்து சாப்பாடு கேட்டா போட மாட்டேன் நீ சாப்பிட்ட உடனேதான் போடுவேன் என்று சொன்னாயேமே திமிரா என்று திட்டுகிறார்.

மறுபக்கம் சூர்யா கட்டில் மேல் இருக்க நந்தினி சொன்னவுடன் அலறி அடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்திரித்து விட்டு தரையில் தான் படுக்கணும் என்று சொல்ல எனக்கு பழக்கம் இல்லை என்று சொல்லியும் தரையில தான் படுக்கணும் தெய்வ குத்தமாகும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 05-1-26