திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் திருமணம் குறித்து சிம்பு தெரிவிக்கையில்,
‘செல்போன் வந்த பிறகு மனிதனின் உணர்வுகள் மாறியிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் காதல் வருகிறதோ அதே வேகத்தில் பிரிவும் ஏற்படுகிறது. அனைத்தும் அதிவேகமாகி விட்டது. ஆனால், ஆழமான உறவுகள் இன்னும் உள்ளன.
திருமணம் செய்து கொள்வது கட்டாயமில்லை என்பது என் கருத்து. மனதளவில் ரெடியான பிறகே திருமணம் செய்து கொள்ளணும். சமுதாயத்தை திருப்தி அடைய வைக்க மட்டும் நான் திருமணம் செய்யவே மாட்டேன்’ என கூறியுள்ளார்.
சிம்பு தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள், ‘மனதளவில் ரெடி இல்லையென்றால் கல்யாணம் செய்யக் கூடாது தான். ஆனால், வயது ஏறிக் கொண்டே போகிறதே அண்ணா. அதனால், சீக்கிரமாக அண்ணியை கொண்டு வரவும்’ என அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


