mari-selvaraj-latest-interview
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாறி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாறி செல்வராஜ் தனுஷின் அடுத்த படம் குறித்து கூறியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், தனுஷுடன் இணைந்து படம் பண்ணுவது முன்பே திட்டமிட்ட ஒன்றுதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அதை உடனே தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தை வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அது நானே எதிர்பார்க்காத அப்டேட் என்று கூறியிருக்கிறார்.
மேலும், தனுஷுடன் நான் இணையும் படம் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அப்படம் வரலாற்று சார்ந்த படமாக இருக்கும் என்றும் அதனால்தான் இத்தனை நாள் காத்திருக்க வேண்டியது இருந்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்தப் படம் இருவரிம் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் அப்பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…