மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் மஞ்சிமா மோகன் எடை குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக பலமுறை தெரிவித்துள்ளார்.
தனது உடல் எடையை கிண்டல் செய்வதால் தனக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அதை தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பார்த்தால் எப்படி வருத்தப்படுவார்கள் என்று பேசி உள்ளார். தான் குண்டாக இருப்பதை பார்த்து பலர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி கேட்டு தன்னை அழ வைப்பதாக கூறியுள்ளார்.
என்னோடு சேர்த்து மற்றவர்களையும் கஷ்டப்பட வைக்கிறேன் என எனக்கு வருத்தமாக உள்ளது. பலமுறை கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என வருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு மற்றவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக வருந்தி உள்ளார்.
