Lawrence gang threatens Ranveer Singh with Rs. 10 crore
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரிச்சந்திரா என்ற ஹாரி பாக்ஸர் என்பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார். ரன்வீர் சிங்கின் மானேஜரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாய்ஸ் மெசேஜை சரிபார்ப்பதற்காகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா போலீஸாருக்கு அனுப்பி இருந்தனர். அது ஹாரி பாக்ஸர் குரல்தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் மும்பை போலீஸார், ஹாரி பாக்ஸருக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே தனது கும்பல் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கியால் சுட்டது, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்டது, இயக்குநர் ரோஷித் ஷெட்டி வீட்டில் துப்பாக்கியால் சுட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…