சினிமா நடிகர், நடிகைகளின் வாழ்க்கை பிரச்சனைகள் பொது தளத்திற்கு வரும் போது அவை அதிகம் பேசப்படுவதும், விமர்சிக்கப்படுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை லாவண்யா திரிபாதியின் பிரச்சனைகள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
சசிகுமாரின் பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்துவர் தற்போது அதர்வாவுடன் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும் தெலுங்கு இணையதள நடிகர் சுனிஷித்-க்கும் திருமணமானதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சுனிஷித் ஒரு பேட்டியில் 2015 ல் லாவண்யாவை திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்துகொண்டதாகவும், மூன்று முறை அவர் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், தனக்கு தமன்னா மற்றும் சில நடிகைகளுடன் தொடர்பிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவ்விசயங்களை மறுத்த லாவண்யா சைபர் கிரைம் போலிசாரிடம் சுனிஷித் மீது புகார் அளித்துள்ளார். மேலும் சுனிஷித் மலிவு விளம்பரத்திற்காக தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கல் ஏற்படுத்தியுள்ளார் என லாவண்யா புகார் அளித்துள்ளார்.
இதனால் தலைமறைவான சுனிஷத்தை போலிசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.![]()

