Kadathal Kaaran From Dec 04th
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான கடத்தல்காரன் திரைப்படம் டிசம்பர் 4ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே வித்யாசமான கதைக் களத்தோடு உருவாகின்றன.
அப்படி முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் தான் கடத்தல்காரன்.
எப் 3 பிலிம்ஸ் சார்பில் பிரயா, பெனி, பெலிக்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடத்தல்காரன். எஸ்.குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் கெவின் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரேணு செளந்தர் அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் கூறியதாவது, கடத்தலை குலத் தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எந்த பொருளை திருடினாலும் மக்கள் அதனை சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.
திருமண வீட்டில் நகைகளை திருடும் போது மணப்பெண்ணை சேர்த்து கடத்தி விடுகிறார்கள். நகைகளை சரி சமமாக பங்கிட்டுக் கொண்ட இவர்கள் மணப்பெண்ணை எப்படி பங்கிடுவது என யோசிக்கின்றனர்.
அதிலிருந்து காதலன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை என கூறி உள்ளார்.
இப்படத்தை வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…