அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்து மீது பழி சொல்லும் அருண் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோட் சத்யா மீனாவுக்கு போன் போட்ட நான் உனக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாருங்க எப்படி சொல்ல மிகவும் பார்த்துவிட்டு போனை வைக்கிறார் பிறகு வெளியில் காலில் அண்ணாமலை என்ஜாய் உட்கார்ந்து கொண்டிருக்க மீனா இந்த வீடியோவை பற்றி பேச வர டிவியில் முத்து வந்த பெண்மணியின் உயிரை காப்பாற்றியது குறித்தும் அருள் திருடனை பிடிக்க போனதால் அவர் மீது மக்கள் குற்றம் சாட்டுவது போலவும் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜயாவிடம் பையன் ஒரு நல்ல விஷயம் பண்ணி இருக்கா அதுக்கு பாராட்டவே மாட்டியா என்று சொல்ல எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மறுபக்கம் ஷோரூம் இன் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் இந்த வீடியோவை பார்க்கின்றனர். இவ என்ன முத்து மாதிரி இருக்கா என மனோஜ் கேட்க முத்து மாதிரி எல்லாம் இல்ல முத்துவே தான் என்று சொல்லிவிட்டு இதை எல்லாம் பார்த்து நீ டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காத வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பிறகு முத்துவை நிற்க வைத்து பேட்டி எடுக்க அவர் உயிரை காப்பாற்றுவதன் அவசியமும் எனக்கு தோன்றத நான் செஞ்ச அதே மாதிரி போலீஸ்காரர் மீது பழி சொல்ல முடியாது அவர் அவருடைய வேலையை தான் செஞ்சிருக்காரு என்று சொல்லுகிறார் உங்களுக்கு மட்டும் எப்படி இதை செய்யறது என்று கேட்க ஒரு உயிரோட மதிப்பு அந்த குடும்பத்துடன் சந்தோஷம் என்று பேட்டி அளிக்கிறார். மறுபக்கம் அண்ணாமலை விஜயாவிடம் உனக்கு ஒருத்தர பிடிக்கலன்னா அவங்க நல்லது பண்ணாலும் உன்னால ஏத்துக்க முடியாது இது ஒத்த உனக்கு புடிச்சிருந்தா கெட்டதே பண்ணாலும் அத நீ அமைதியா இருப்ப என்று சொல்லுகிறார்.

ஏற்கனவே இவ தங்கச்சி புருஷன இவனுக்கும் ஆகாது இப்போ வேணும்னே இதை பண்ணி இருக்கான் என்று சொல்லுகிறார் உனக்கு அவனை பாராட்ட மனசில்லனா அமைதியா விடு தேவையில்லாத பேசிகிட்டு இருக்காத என்று சொல்ல நீங்க அவனை பாராட்டிகிட்டே இருங்க இது தவறு உங்களுக்கு வேற என்ன தெரியும் என்று சொல்லிவிட்டு விஜயா சென்று விடுகிறார். மறுபக்கம் அண்ணாமலை மீனா விடம் பாவம் உனக்கு தான் ரொம்ப கஷ்டம் ஒரு பக்கம் இப்படி பண்ணுது இன்னொரு பக்கம் தங்கச்சி புருஷனை எல்லாரும் திட்டிகிட்டு இருக்காங்க என்று சொல்ல ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் ஆக மாட்டேங்குது இப்ப இது வேற ஒரு நடந்திருக்கு என்று மீனா சொல்லுகிறார். மறுபக்கம் அருண் அம்மா வீடியோவை பார்த்துவிட்டு அழுது கொண்டே சீதாவிடம் பேசுகிறார். என் பையனுக்கு இந்த நிலைமை வந்திருக்கு எல்லாரையும் திட்றாங்க என்று சொல்லி கண்கலங்கி அழ சீதா ஆறுதல் சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் அருண் வர என்னப்பா இப்படி நடந்துச்சு என்று சொல்ல போலீஸ்காரனாக என்ன பண்ண முடியுமா அதைத்தான் நான் பண்ணேன் அவ்வளவு பேர் அங்க இருக்காங்க அவங்கள காப்பாத்திடுவாங்கன்னு நினைச்சு தான நான் அக்யூஸ்ட்ட பிடிக்க போனேன் இது ஒரு தப்பா அந்த முத்து கரெக்டா பிளான் பண்ணி தந்திரமாக வேலையை பார்த்துட்டா என்று சொல்லிவிட்டு இதுவே நீங்க மாட்டீங்களா என்னை சஸ்பண்ட் பண்ணிட்டாங்க மூணு நாளைக்கு என்று சொல்லி வருத்தப்பட்டு பேசி விட்டேன் ரூமுக்கு சென்று விடுகிறார். உடனே அருண் அம்மா உங்க மாமா செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல சீதா அப்படி ஒரு பேட்டியாக அவர் ஏன் கொடுத்து இருக்காரு உங்க மாமாவுக்கு தான் எதை பத்தியும் கவலை இல்லைன்னா உங்க அக்காவுக்கும் வாழ்க்கை பத்தி எந்த கவலையும் இல்லையா என்று கேட்கிறார். சீதா ரூமுக்கு வர அருண் சீதாவின் கையைப் பிடித்து நான் எந்த தப்பும் பண்ணல சீதா என்று அழுகிறார். மறுபக்கம் முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை அவரை வெளியிலேயே நிற்க சொல்லுகிறார்.முத்து என்ன கேட்கிறார்? அதற்கு குடும்பத்தார் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 18-10-25
jothika lakshu

Recent Posts

Rippipee Lyrical Video

Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…

20 hours ago

Sing Geetham Tamil Trailer

Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…

21 hours ago

Maaya Kanavo Video Song

Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…

21 hours ago

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

1 day ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

1 day ago

‘வடசென்னை 2’ல் தனுஷ் – சிம்பு இணைகிறார்களா?

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…

1 day ago