‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யத்தின் சார்​பில் தாக்கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்​புக்கு தடை விதித்து மேல்​முறை​யீட்டு வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்​தது. அத்​துடன், பதில் மனு தாக்​கல் செய்ய தயாரிப்பு நிறு​வனத்​துக்​கும் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் வழக்​கறிஞர் இ.சி.அகர்​வாலா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசி ஆகியோர் அடங்​கிய அமர்வு ஜனவரி.15-ந்தேதி விசா​ரித்​தது.

தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி ஆஜராகி, தணிக்கை வாரி​யத்​தின் சான்று கிடைப்பதற்கு முன்பே படம் வெளி​யாகும் தேதியை அறிவிப்​பது திரைப்​படத் துறை​யில் வழக்​கம் என்று வாதிட்டார்.

அப்​போது நீதிப​தி​கள், ‘இந்த விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை ஒரே நாளில் விசா​ரித்து உத்​தர​விட்​டதை போல, அனைத்து நீதிப​தி​களும் அனைத்து வழக்குகளை​யும் ஓரிரு நாட்களுக்​குள் விசாரித்து தீர்ப்பு கூறினால் வரவேற்போம். இந்த விவ​காரத்​தில் 6-ந்தேதி தாக்​கல் செய்த மனுவை மிக விரைந்து 7-ந்தேதி விசா​ரித்து உத்​தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தணிக்கை வாரி​யத் தலை​வர் மறு ஆய்வு குழு​வுக்கு அனுப்பி வைத்த 6-ம் தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்ய​வில்​லை’ என்​றனர்.

இதற்கு மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி, ‘மறு ஆய்வு குழு பரிசீலனைக்கு திரைப்​படம் அனுப்பி வைக்கப்பட்டுள்​ள​தாக மத்​திய தணிக்கை வாரி​யத்​திடம் இருந்து ஜனவரி 5-ந்தேதி கிடைத்த கடிதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்​பட்​டது. இதே தகவலை மத்திய தணிக்கை வாரி​யத் தலை​வர் ஜனவரி 6-ந்தேதி தெரி​வித்​தார். ஜனவரி 5-ந்தேதி​யிட்ட உத்​தர​வுக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டது.

மத்​திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்​தரவு இந்த விவகாரத்​தில் கெட்ட நோக்கத்​துடன் உள்​ளது. திரைப்​படம் உரிய நேரத்​தில் திரை​யிடப்​ப​டா​விட்​டால் அழுகிப் போன பொருளை போன்று நஷ்டம் ஏற்​பட்டு விடும்’ என வாதிட்​டார்.

‘Jananayakan’ film crew argues in court…’Censorship Board with malicious intent’
dinesh kumar

Recent Posts

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கும் ‘சேயோன்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…

1 day ago

மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் ‘துரந்தர்-2’

ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

1 day ago

75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி!

75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…

1 day ago

அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை – இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…

1 day ago

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…

1 day ago

Verappa Extended Lyric Video

Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | ‪Sai Abhyankkar‬ | Dream…

1 day ago