Jana Nayagan வழக்கு.. இன்று விசாரணை!

Jana Nayagan வழக்கு.. இன்று விசாரணை!

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார்.

ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது.

படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்குதான் அதிகாரம் இருக்கிறது. சென்சார் போர்டு தலைவரின் முடிவை தயாரிப்பு நிறுவனம் எதிர்க்காமலேயே தனி நீதிபதி அதை ரத்து செய்துள்ளார் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் வாதிடும்போது, தனி நீதிபதி அனைத்தையும் ஆய்வு செய்துதான் உத்தரவு பிறப்பித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று காலையிலேயே விசாரணை தொடங்கிய நிலையில், உணவு இடைவேளை முடிந்தும் விசாரணையானது தொடங்கப்பட்டது. ஆனால், மறு ஆய்வுக் குழு அமைக்க 20 நாட்கள் வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரி இருக்கிறது.

படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

டிசம்பர் 29-ந்தேதிக்கு பிறகு சென்சார் போர்டு தகவல்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை. மறுதணிக்கை என்று எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருந்தால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்று தணிக்கை வாரியம் தெரிவித்தது.
விதிகளின்படி படத்தை பார்த்து 2 நாட்களில் சென்சார் சான்று வழங்கி இருக்க வேண்டும்.

டிசம்பர் 18-ந்தேதி தணிக்கை வாரியம் படத்தை பார்த்தது. மேலும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் அனைத்தும் டிசம்பர் 25-ந்தேதியே நீக்கப்பட்டு விட்டது என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.

சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவே அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் டிசம்பர் 29-க்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஓடிடி நிறுவனமான அமேசான் தரப்பில் கேட்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்வது? ஏற்கனவே ஜனவரி 9-ந்தேதி படம் திட்டமிட்டப்படி வெளியாகததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Jana Nayagan case.. Hearing today!
dinesh kumar

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

14 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

14 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

15 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

15 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

15 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

15 hours ago