தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது.
ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் 2 வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது
இந்த நிலையில் படத்தின் இயக்குனரான மோகன் ராஜா அவர்கள் லேட்டஸ்ட் ஒன்று கொடுத்துள்ளார் அதாவது அர்ச்சனா கல்பாத்தியுடன் இந்த படத்தின் சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அவர் இது சரியான நேரம் இல்லை கண்டிப்பாக இது நடக்கும் ஆனால் கொஞ்சம் சினிமா துறையில் நிலை மேம்படட்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் இதனால் இப்படம் நாம் நினைத்தது போன்று விரைவில் நடக்குமா என்பது தெரியவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் கண்டிப்பாக ஒரு அப்செட்டை கொடுத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
