கடந்த 2018 ல் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் என பலர் நடிப்பில் 18 வயது வந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் வெளியானது.
அடல்ட் காமெடியை விரும்புபவர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வெற்றி பெற்றது. அப்போதே இந்த படத்தின் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் கடும் எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹீரோவாக தானே நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். உடன் பிக்பாஸ் டேனியும் நடித்துள்ளார்.
அண்மையில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலும் உத்திரபிரதேச இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இப்படியான விசயம் தேவை தானா என பலரும் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்துள்ளனர்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…