கொத்தமல்லி உப்பு செய்யும் முறையையும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுகளையே சாப்பிடுவதால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.எனவே ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி உப்பு செய்வது எப்படி பார்க்கலாம்.
ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை எடுத்து அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.மேலும் கரு மிளகு, பூண்டு,புதினா, வறுத்து அரைத்து இரண்டையும் சேர்த்து கலந்து வெயிலில் காயவைத்து பின் குழம்பில் சேர்த்து சமைக்க வேண்டும்.
இது உணவில் சேர்த்து சாப்பிடும் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.கண்களுக்கு ஆரோக்யம் கொடுப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

