ஜி பி முத்துவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது.
சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி பி முத்து அவரது வீட்டு பக்கம் இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்திலேயே கோவில் இருப்பதாகவும் அதில் காலை ஏழு மணியிலிருந்து பாட்டு போட ஆரம்பிச்சா சாயங்காலம் வரை போடுறாங்க என்றும் கூறியுள்ளார்.
இதனால ஸ்கூல் பசங்களோட நிலைமை என்ன ஆகிறது இப்போ எக்ஸாம் வேற நடக்குது இந்த நேரத்துல பாட்டு போட்றதால பசங்க சங்கடப்படுவாங்க சவுண்ட் குறைச்சு வச்சா தான் என்ன கோவிலை விட படிப்பு தான் முக்கியம் என்று அவரது ஆதங்கத்தை பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பேச்சுக்கு உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


