Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சக்தி சொன்ன வார்த்தை. போலீஸ் கொடுத்த ஷாக். இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

ethir-neechal serial episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது, ஜனனி, ஈஸ்வரி நந்தினி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சக்தி ஓடிவந்து அந்த வக்கீல் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்து விட்டது, நாம உடனடியாக கிளம்பியாகனும் என்று சொல்ல எல்லோரும் கிளம்பி செல்கின்றனர்.

இங்கே ரவுடிகள் தர்ஷினியை கட்டி போட்டு எங்கேயும் தப்பிக்க முடியாது என்று சொல்ல தைரியம் இருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு விடுங்கடா என தர்ஷினி சத்தம் போடுகிறார்.

ஜனனிக்கு போன் போன் போடும் போலீஸ் டெட் பாடி அருகே நின்று கொண்டு நாங்க சொல்றத பதற்ற படாம கேளுங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

ethir-neechal serial episode-update
ethir-neechal serial episode-update