Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனி சொன்ன வார்த்தை. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ‌இதில் ஜனனியிடம் சாருபாலா அப்பத்தா கேசில் நான் ஆஜராகி இருப்பது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்க தெரியும்போது தெரியட்டும் என ஜனனி சொல்லி விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் இந்த கேஸ்க்கும் ஜீவானந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, குற்றவாளி வேற யாரோ ஒருத்தன் என்று தெரிய வந்தால் எங்க வழியில உங்க பையன் குறுக்க வரக்கூடாது என விசாலாட்சிக்கு கண்டிஷன் போடுகிறார் ஜனனி.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் போலீஸ் குணசேகரன் மற்றும் கதிரை ஸ்டேஷனுக்கு அழைக்க அதெல்லாம் வரமுடியாது என கதிர் சொல்கிறார். விஷயம் எஸ்.பி வரைக்கும் போயிடுச்சு நீங்க வரலைன்னா அப்புறம் ஸ்போர்ஸை கூட்டிட்டு வந்து அள்ளிக்கிட்டு போற மாதிரி இருக்கும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update