Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனி திட்டத்தை உடைத்த குணசேகரன்.ஜனனியை நினைத்து அழும் விசாலாட்சி. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்

ethir-neechal serial episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் ஜனனியின் திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி குணசேகரன் ஆதிரையை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து நடுரோட்டில் வைத்து கரிகாலன் கையால் தாலி கட்ட வைத்தார்.

இதையடுத்து காரில் அவர்களுடன் வந்த அதிரை தாலியை கழட்டி நடுரோட்டில் வீச குணசேகரன் திரும்பவும் தாலியை கட்ட வைத்து நேராக ரெஜிஸ்டர் ஆபீஸ் அழைத்துச் சென்றார். இந்த நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஆதிரை ரெஜிஸ்டர் முன்னாடி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு ஒத்த வார்த்தை சொன்னா போதும் உங்க எல்லாரையும் தூக்கி கூண்டோட ஜெயில்ல உட்கார வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஜனனிடம் விசாலாட்சி என் புள்ள ஜெயிச்சுட்டான் நீ மொத்தமா தோத்து நிக்கிற என ஆதிரையின் வாழ்க்கையை நினைத்து கண்ணீரோடு பேச ஈஸ்வரி போதும் அத்தை என்று சொல்ல வந்து பேசுவாங்க பாரு என அழுது புலம்புகிறார்.

இதனால் ரெஜிஸ்டர் ஆபீஸ் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ethir-neechal serial episode-update
ethir-neechal serial episode-update