நீரிழிவு நோய் இருந்தால் நம் உடலில் பாதிக்கப்படும் உறுப்புகள் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
நீரிழிவு நோய் பெரும்பாலும் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நோய் ஆகும். அப்படி நீரிழிவு நோய் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
முதலில் பாதிக்கப்படுவது இதயம்.
நீரிழிவு நோயாளியாக இருப்பவர்கள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் மற்றும் மாரடைப்பையும் ஏற்படுத்திவிடும்.
இரண்டாவதாக பாதிக்கப்படுவது சிறுநீரகம். சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்கும்போது சிறிய ரத்த நாளங்கள் சேதம் அடைந்து வீக்கமாக ஆகும். இது சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
மூன்றாவதாக பாதம். நாம் சர்க்கரை நோய் அளவை சரியாக பராமரிக்க தவறினால் பாது நரம்புகள் சேதம் அடைந்து ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு பாதங்கள் மரத்துப் போகும்.
நான்காவதாக கண்கள். சர்க்கரை அளவு தொடர்ந்து நம் உடலில் அதிகமாகவே இருக்கும் போது பார்வையை இழப்பதோ அல்லது பலவீனமான பார்வை போன்ற பிரச்சனை ஏற்படுத்தும்.

