கீரையை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே கீரை நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடும். ஆனால் அதுவே நாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கையும் விளைவிக்கிறது.
முதலாவதாக சிறுநீரக கல் பிரச்சனை உருவாகிறது.
கீரைகளில் அதிகமாக இருக்கும் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்க கூடும்.
மேலும் இரண்டாவதாக பார்க்கக் கூடியது செரிமான பிரச்சனை. அதிகமாக கீரையை சாப்பிடும் போது செரிமான மண்டலத்தை பாதிக்கிறது. மூன்றாவதாக மூட்டு வலி பிரச்சனையும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எனவே கீரை ஆரோக்கியமானதாக இருந்தாலும் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை உணர்ந்து அளவோடு சாப்பிட்டு எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.