மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் படங்களில் பிசியாக இருந்தாலும் அதே நேரம் குழந்தைகளிடமும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன், உயிர் மற்றும் உலக் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், ஒரே கையில் உயிரையும் பிடித்துக்கொண்டு உலகத்தையும் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கும் விக்னேஷ் சிவன் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்கலை குவித்து வருகின்றனர்.
