ஸ்ரீ லீலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சுதா கொங்காரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீலீலா குறித்து சுதா கொங்காரா புகழ்ந்து பேசி உள்ளார்
ஸ்ரீலிலா ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்துடனும் தமிழை நன்றாக கற்றுக் கொண்டார். அவர் நடனத்தில் ஒரு ராணி ஒப்பனை இல்லாமல் அழகு துறையில் ஒரு முகத்தைப் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது.ஆனால் ஶ்ரீ லீலா வைஜெயந்திமாலாவின் சாயலை கொடுக்கிறார்.
பராசக்தி படபிடிப்பின் போது அவருக்கு இறுதி மருத்துவ தேர்வுகள் இருந்தன ஆனால் காலையில் தேர்வுகளை மதித்து விட்டு மதியத்திற்குள் படபிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார் நான் அவருடைய கண்களில் ஒரு தீப்பொறியை கண்டேன் அந்த தருணத்திலேயே அவரை படத்தில் ரத்தினமாலா கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


