director seenu ramasamy viral post about thalapathy vijay
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இவர் தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலம் அரசியலில் களம் இறங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்றார் போல் விஜய்யும் அரசியல் சார்ந்த பல நல்ல விஷயங்களை மக்களுக்கு தனது இயக்கம் மூலம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்றைய முன் தினம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 6000 மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி ஊக்குவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பலவிதமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் சீனு ராமசாமி அவர்கள் விஜயை பாராட்டி வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், கல்விக்கு ஊக்க கண் திறக்கும் ‘நண்பா’. இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்தும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.
I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy
Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer
Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…