director rishabh shetty meet actor rajinikanth photos update
இந்திய திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் நடிகர் ரஜினி அவர்கள் நல்ல கதை அம்சத்துடன் வெளியாகும் திரைப்படங்களை பாராட்டி தனது கருத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவார். அந்த வகையில் அவர் அண்மையில் கன்னட மொழியில் உருவாகி வெளியான காந்தாரா திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு காந்தாரா திரைப்படத்தின் இயக்குனரான ரிஷப் செட்டி அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது, கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து தற்போது இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது.
இந்த நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ரஜினியை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து ரிஷப் ஷெட்டி ட்விட்டரில் கூறியுள்ளதாவது, ஒருமுறை உங்களை புகழ்ந்தால் 100 முறை உங்களை புகழ்வோம், நன்றி ரஜினி சார். எங்களுடைய காந்தாரப் படத்தை பாராட்டியதற்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம் என கூறி உள்ளார். இவரது இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…