director prashanth pandiaraja about maaman movie
நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் மே மாதம் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘மாமன்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், பழம்பெரும் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்வாஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் படம் குறித்து பேசுகையில், ‘விலங்கு’ தொடரின் திகில் மற்றும் வன்முறை பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை சொல்ல விரும்பியதாக கூறினார். நாம் ஒருவரையொருவர் சார்ந்து, உதவி செய்து வாழ்ந்து வருகிறோம். அந்த உறவுகளின் முக்கியத்துவத்தை சினிமாவிலும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ‘மாமன்’ திரைப்படம் ஐந்து வயது சிறுவனை மையமாக வைத்து, உறவுகளின் நெருக்கத்தையும் அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் கதை.
மேலும், இது சூரிக்கு தான் சொன்ன ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும், இதில் யாரும் வில்லன்கள் இல்லை என்றும், ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உறவுகள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் நம் கண்ணுக்கு பெரிதாக தெரிவதில்லை. பல பிரச்சினைகள் நாம் சரியாக புரிந்து கொள்ளாததாலேயே ஏற்படுகின்றன. தவறு செய்யாத மனிதன் யாருமில்லை. ஆகவே, கிராமத்து மண்ணையும், அங்குள்ள மக்களின் மனதையும் மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க முயற்சி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘மாமன்’ படத்தில் சூரி, தன் அக்கா மகன் மீதுள்ள பாசத்தையும், தனக்குப் பழகிய பெண்ணின் மீதுள்ள காதலையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தோன்றும் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தில் உள்ளன. ‘மாமன்’ திரைப்படத்தைப் பார்க்கும்போது நம்முடைய உறவுகள் அனைவரின் நினைவும் வரும் என்று இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…