மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாறி செல்வராஜ் அவரது மனைவி குறித்து பேசி இருப்பதை தற்போது வெளியாகியுள்ளது.
பெரியார் கூட எனக்கு நெருக்கமே இல்லை பெரியாரை எனக்குள் ஆழமாக கொண்டு வந்தது என்னோட துணைவி தான் என்று மகிழ்ச்சியாக பேசி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


