தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு.
இந்த படத்தின் முதல் நாள் முதல் கட்சி கடந்த ஜனவரி 11ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. படம் வெளியான போது ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது ஏறி நடனமாடிய ரசிகர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு பெரிய முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. படத்தை சந்தோஷமாக பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனால் போதும். உயிர் போகும் அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.


