தென்னிந்திய சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்க அந்த படமும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்ட லோகேஷ் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் படத்தை இயக்கி 500 கோடி வசூலை பெற்றார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தளபதி விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.
அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் கேஜிஎப் பட நாயகன் யஷ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கான கதை ஒன்றை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படமும் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் உருவாக இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் பற்றி வெளியாகி உள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
