வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து தனுஷ் போட்ட பதிவு

கோலிவுட்லிருந்து ஹாலிவுட் வரை தனது திரையுலக பயணத்தை விரிவு படுத்தி இருக்கும் நடிகர் தனுஷ் அவரது 39 ஆவது பிறந்த நாளை நேற்று கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பாசத்தோடு தெரிவித்து வந்தனர்.

மேலும் அவரது வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் பட குழுவினர்கள் நடிகர் தனுஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அந்தப் படங்களில் இருந்து டீசர் மற்றும் பாடலை வெளியிட்டனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “என் பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு எனது அன்பையும், நன்றியையும், வெளிப்படுத்த வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன்.

கடந்த 20 வருடங்களாக என் சினிமா பயணத்தில், எனக்கு நம்பிக்கை அரணாக திகழும எனது ரசிகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நட்புறவுகளுக்கு என் நன்றி கலந்த வணக்கம் என தெரிவித்துள்ளார்”. மேலும் விரைவில் வெள்ளித்திரைகள் சந்திப்போம் என்றும் இறுதியாக ஓம் நமச்சிவாயா மற்றும் அன்புடன் D என தன்னுடைய பெயரின் முதல் எழுத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago