தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களாக கொடுத்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இணைய இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் இவர்கள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்
