Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார்.. யாரடி நீ மோகினி படம் குறித்து பேசிய தனுஷ்

dhanush-about-raghuvaran

கோலிவுட்லிருந்த ஹாலிவுட் வரை தனது திரையுலகப் பயணத்தை விரிவுபடுத்தி அசத்தி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக இன்று வரையும் இருக்கின்றது. இதில் நடிகர் தனுஷ்க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் இணைந்து நடித்திருந்தார்.

ரகுவரன் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் ரகுவரனுடன் ஒரே ஃபிரேமில் நடித்தது பெரும் சவாலாக இருந்தது.

ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார் என்பதால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தேன். மேலும் இத்திரைப்படத்தில் அப்பா-மகனாக தங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது என கூறியுள்ளார். இவ்வாறு நடிகர் தனுஷ் ரகுவரனை குறித்து பேசியுள்ள இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

dhanush-about-raghuvaran
dhanush-about-raghuvaran