நடிகை தேவயானி தமிழ் சினிமா ரசிகர்கள், ரசிகைகளால் மறக்க முடியாத நபர். குறிப்பாக 90’S கிட்ஸின் ஃபேவரை நடிகை. அஜித், விஜய் என பலருடன் ஜோடியாக நடித்து வந்தார்.
இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டவர் சில வருடங்களுக்கு பின் கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். நைட்டி விளம்பரத்திலும் அவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதன் அவருக்கென படங்கள் சீரியல்கள் அமையவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் அரசின் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்ட வீட்டில் தன் கணவர் குழந்தைகளுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு வித விதமாக சமைத்து போடுவதாகவும், தோட்ட வேலைகள் செய்வதாகவும், வெளியே எங்கும் செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஊரடங்குக்கு பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.