தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்னும் ஹாரர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இதில் அருள்நிதியுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


