நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவை கட்டுப்பாட்டுடன் உண்ணுவது வழக்கம். அப்படி வாசனை தரும் மசாலா பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது. இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
இலவங்கப்பட்டை நீரை தயாரிக்க முதலில் மூன்று டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை 1லி தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை ஒரு மருந்தாகவே பயன்படுகிறது என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.