வீட்டிற்கு சென்ற ரசிகர். நெகிழ்ச்சியில் விக்ரம் போட்ட பதிவு

கோலிவுட் திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். சியான் விக்ரம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் விக்ரமின் விலா எலும்பு முறிந்ததாகவும், அதனால் சிறிது காலத்துக்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை சீக்கிரமாக குணமடைய வேண்டி சிவா என்னும் ரசிகர் ஒருவர் விக்ரமின் வீடு வரை சென்று அவரை வாழ்த்தி தன் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் “ஆஸ்கர் உங்களுக்காகக் காத்துள்ளது, நீங்கள் மீண்டு வருவதற்காக காத்திருக்கிறேன். என்றும் உங்களுடன் நாங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனைக் கண்டு நெகிழ்ந்து போன விக்ரம் “மிக்க நன்றி சிவா. வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். ஐ வில் பி பேக்” எனப் பதிவிட்டுள்ளார். இவர்களது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

13 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

13 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

13 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

13 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

13 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago