திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்து முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாஸ்டர் போன்ற படங்களின் ரிலீஸ் தேதியும் தெரிய வரும்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவை எதிர்த்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் திரையரங்குகள் பள்ளி கல்லூரிகள் போன்றவை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதில் தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் ஜூம் App மூலமாக அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் உடன் பேசினார்.
அனைவரும் மத்திய அரசின் உடனான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருமனதாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கும் அதனை மாநில அரசும் ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தேதி வெளியாவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனால் விஜய் ரசிகர்கள் விரைவில் மாஸ்டர் பட அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…