மூட்டு வலி பிரச்சனைக்கு கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் நீர் மருந்தாக பயன்படுகிறது.
நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் மசாலா பொருட்களில் முக்கியமானது மஞ்சள் மற்றும் மிளகு. அப்படி நாம் பயன்படுத்தும் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு மூட்டு வலி பிரச்சனை மட்டுமல்லாமல் உடல் பருமன் குறைவது மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது என்று உங்களுக்கு தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.
முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து மிளகுகளை பொடியாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து வடிகட்டி குடித்து வந்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொற்று நோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். மேலும் இருமல் சளி பிரச்சனைக்கு இது மிக முக்கியமாகவே கருதப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் மூட்டு வலி பிரச்சனையை குறைத்து விடும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது முக்கியமாக பயன்படுகிறது.