தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது படங்கள் இப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகின்றன. குறிப்பாக விஜயின் படங்கள் சரி இல்லை என்றாலும் நல்ல வசூலை பெறுகின்றன.
சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அஜித்தின் வாசல் படத்திற்கு பிறகு வெளியான நேர்கொண்டபார்வை வலிமை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அஜித்தின் சம்பளம் நூறு கோடிக்கு ஏறியுள்ளது.
விஜய் அளவிற்கு அஜித்தின் படங்களுக்கு வியாபாரம் இல்லை என்றாலும் விஜய்யின் சம்பளம் உயரும் போதெல்லாம் அஜித்தின் சம்பளம் ஏறுகிறது என பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உருவாகியுள்ளது.


