இரண்டு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட சாச்சனா 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்கான நாமினேஷன் ஆரம்பித்தது.
அதில் அருண் பிரசாத், ஜாக்லின், ரஞ்சித், ரவீந்தர், சௌந்தர்யா, முத்துக்குமரன் என ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த ஆறு பேரில் வார இறுதியில் இரண்டு பேர் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.
அது ஜாக்குலின் மற்றும் அருண் என தெரிந்துள்ளது. இவர்களில் இருவர் யாராவது வெளியே வருவாரா? இல்லை ஓட்டுக்களில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
