Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகிழ்ச்சியில் இருக்கும் வெண்பா. ரோஹித்திற்கு வந்த சந்தேகம். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவை கடத்திய ரவுடிகள் அவளை உட்கார வைத்து கட்டி போட்டு வைத்திருக்க பிறகு வெண்பாவுக்கு போன் போட்டு குழந்தையை கடத்தி ஆச்சு அடுத்து என்ன பண்ணனும் என கேட்க கொன்னுடு என வெண்பா ஆர்டர் போடுகிறார். ஆனால் இன்னொரு ரவுடி குழந்தையை கொல்ல வேண்டாம். கைமாற்றி விட்டுவிடலாம் இதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என சொல்ல மீண்டும் வெண்பாவுக்கு போன் போட்டு இப்படி செய்யலாமா என கேட்க வெண்பாவும் சரி என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் கண்ணம்மா, சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி என எல்லோரும் ஹேமாவை தேடி அலைகின்றனர். அப்போது சௌந்தர்யா பாரதி டெல்லிக்கு போன விஷயம் குறித்து பேச ஒரு வேலை அவர் ஹேமாவ கூட்டிட்டு போய் இருப்பாரு என கண்ணம்மாவுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அகிலன் அதற்கு வாய்ப்பில்லை ஹோமாவை தான் ஆசிரமத்தில் பார்த்து இருக்காங்களே என கூறுகிறார்.

இந்த பக்கம் ரவுடிகள் ஹேமாவை விற்க எல்லா வேலைகளையும் செய்து ஹேமாவை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். ஹேமா என்ன வீட்ல விட்டுடுங்க நான் எங்க பாட்டிகிட்ட பணம் கூட வாங்கி தரேன் என பேச அவர்கள் ஹேமாவை மிரட்டி சாப்பிட வைக்கின்றனர்.

அடுத்து பெண்பா வீட்டில் ஹேமா கண்ணுக்கு தெரியாத இடத்திற்கு போய் கஷ்டப்படுவதை நினைத்து சந்தோஷப்பட்டு சிரித்துக் கொண்டிருக்க இதை பார்க்கும் ரோஹித் ரூமுக்குள் வந்து தலையில் கட்டுவதற்கு என்ன ஆச்சு ஏன் இப்படி சிரிச்சிட்டு இருக்க? என கேட்டேன் வெண்பா சொல்ல முடியாது என கூறுகிறார். வெண்பாவின் நடவடிக்கையில் ரோஹித்துக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update